கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை இந்த ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.