மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 9, 16, 23, 30 ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களிலும், மறுமார்க்கத்தில் ஞாயிறு அன்று ஜூலை 8, 15, 22, 29, 6 ஆகிய நாட்களிலும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.