ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்தது. சில நொடிகளில் தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் நான்கு ராணுவ வீரர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.