
தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் எதிராக விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையானது நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இதனால் மொழிவாரி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு மொழி வாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பாக வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக 2022-23 கல்வியாண்டில் மனுதாரர் பிரதிநிதித்துவப்படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.