சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட போதும் இது நாள் வரை சுற்றுலா துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே மேற்கூறிய நிறுவனங்கள் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும் கூடுதல் விவரங்களுக்கும் மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், காரைக்குடி என்ற முகவரியிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.