சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பணிமனையில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன்(52), தனது நண்பரான ராமு(47) என்பவருடன் இணைந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க் ஆறுமுகம்(55) என்பவரிடம் விடுமுறை கேட்டார்.

அதற்கு ஆறுமுகம் விடுமுறை தர மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த கோபாலகிருஷ்ணன், ராமு ஆகிய இருவரும் இணைந்து தகாத வார்த்தையால் திட்டி ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணன், ராமு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.