மத்தியப் பிரதேசம், குவாலியரில் சமீபத்தில் நடந்த நந்தினி கொலை வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நந்தினியை அவரது கணவர் அரவிந்த் பரிஹார் பட்டப்பகலில் சுட்டு கொன்ற சம்பவம், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், பேஸ்புக் லைவ் வீடியோவில் அரவிந்த், நந்தினி தன்னை ஏமாற்றினார் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆடியோ கிளிப் வெளியிடப்பட்டு, அதில் அரவிந்த், நந்தினியிடம் “பூஜாவுக்காக நான் உன்னை ஏமற்றிவிட்டேன்” என்று கூறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆடியோயின் பின்னணி கொலைக்கு முன் நடந்த  வாக்குவாதத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த ஆடியோவின் நம்பகத்தன்மையை தயாரான முறையில் உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கின்றன.

அரவிந்த் அந்த ஆடியோவில், “நான் வழக்கில் வெற்றி பெறுவேன். நீ ஒரு தளர்வான குணம் கொண்ட பெண்; அதை நான் நிரூபிப்பேன்.” என்கிறார். இதற்கு நந்தினி “நீ முன்பு என்னை மனைவி என்று அழைத்தாய். இப்போது என் மீது குற்றம் சாட்டுகிறாய்.” என்றார். அடுத்து அரவிந்த் “பூஜா உன்னைப் போல இல்லை. அவள் இன்னும் என்னுடையவள்.” என்றார். அதற்கு நந்தினி கேட்கிறார்: “நீ என்னை இவ்வளவு ஏமாற்றினாயா?” என்று அதற்கு அரவிந்த்: “ஆமாம்.” என்றார்.

இதுவரை, இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை போலீசார் அல்லது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த வழக்கில் ஒவ்வொரு அம்சத்தையும் காவல்துறை ஆழமாகத் விசாரித்து வருவதை தொடர்ந்து, தொழில்நுட்ப சான்றுகள், சைபர் நிபுணர்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு மத்தியப் பிரதேசம் முழுவதும் விவாதபொருளாக மாறியுள்ளது.