இயக்குனர் பாண்டியராஜ் கடந்த 2009 ஆம் வருடம் நடிகர் விமல் நடித்த பசங்க படத்தை இயக்கினார். இந்த படம் தேசிய விருது வென்றது. இதனை அடுத்து அருள்நிதி நடிப்பில் வம்சம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, விஷால் நடிப்பில் வெளியான கதகளி, கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், சூர்யா நடிப்பில் எதற்கு துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் விற்பதாகக் கூறி 1.89 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர், பாண்டிராஜிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி 1.89 கோடியை மோசடி செய்துள்ளார். இதையடுத்து, இந்த மோசடி குறித்து பாண்டிராஜ் புகார் அளித்த நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்