உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.