தமிழகத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களை எமிஸ் இணையதளத்தில் இருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே பணி மாறுதல் வழங்கப்படும். ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இந்த ஆணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகளை பரிசளிக்க இயலாது எனவும் பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.