மேற்குவங்க மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு திடீரென்று விடுதி  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி விடுதி அறையில் இருந்த அந்த மாணவனை அவனுடைய சீனியர்கள் ராக்கிங் செய்ய தங்களுடைய அறைக்கு அழைத்துள்ளார்கள்.

மேலும் மாணவனை ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளார்கள். டார்ச்சர் தாங்க முடியாமல் அதிலிருந்து தப்பிக்க ஒரு இடத்தில் இருந்து மாணவன் மற்றொரு அறைக்குள் நுழைந்துள்ளார். ஆனால் அதற்குள் சீனியர்கள்  அவனை பிடித்து அழைத்து ராக்கிங் செய்துள்ளார்கள். இப்படி செய்த இந்த சம்பவம்நைட்  11 மணி வரை நீடித்து இருக்கிறது. அதோடு ராக்கி செய்தவர்கள் மாணவன் தன் பாலின வேட்பாளர் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த மாணவன் கொடுமைகளை தாங்க முடியாமல் ஒருகட்டத்தில்  தற்கொலை செய்துள்ளார். இதனை எடுத்து காவல்துறையினர் இதில் சம்மந்தப்பட்ட 13 பேரை கைது செய்துள்ளனர் .புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் நாளும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராக்கிங் விதிமுறைகளை கடுமையாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.