நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக செயல்பட்ட வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

நைஜர் நாட்டின் ராணுவத்தின் இத்தகைய செயலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா ஒன்றியம், ஐநா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் நைஜரில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.