ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (32). நடன ஆசிரியரான தேஜஸ்வர் நில அளவையாளராக வேலை பார்க்கிறார் கடந்த மே மாதம் வங்கி மேலாளராக வேலை பார்க்கும் சுஜாதா என்பவரது மகள் ஐஸ்வர்யாவுடன் தேஜஸ்வருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த 17-ஆம் தேதி காணாமல் போன தேஜஸ்வரை குடும்பத்தினர் தேடி வந்தனர். கர்னூல் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுகாலிமெட்டு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேஜஸ்வர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

ஐஸ்வர்யா ஏற்கனவே தனது தாய் வேலை பார்க்கும் வங்கியில் பணி புரியும் ஒரு ஊழியரை காதலித்து வந்ததாக தெரிகிறது. தேஜஸ்வருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயமான சமயத்தில் ஐஸ்வர்யா காணாமல் போய்விட்டார். சில நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய ஐஸ்வர்யா நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாக கூறியுள்ளார்.

அதன் பிறகு திருமணமும் நடைபெற்றது. சம்பவம் நடந்த அன்று ஐஸ்வர்யா நில அளவை செய்ய வேண்டும் எனக் கூறி தனது கணவரை காரில் அழைத்து சென்றார். அதன் பிறகு தேஜஸ்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஐஸ்வர்யா, அவரது தாய் சுஜாதா காதலன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தேஜஸ்வர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருமணமான பிறகும் ஐஸ்வர்யா தனது காதலனை தொடர்பு கொண்டு பலமுறை செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.