தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் அவ்வப்போது தங்களுக்கு பிரியமான கடவுளை கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கெளதம் கார்த்திக், மனைவி மஞ்சிமா மோகனுடன் சாமி தரிசனம் செய்தார். மலையடிவாரத்தில் இருந்த ரோப் கார் மூலம் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டனர்.

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று நடிகை சமந்தா இது கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.