நெல்லை – சென்னை மற்றும் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும். நெல்லை மற்றும் தாதர் விரைவு ரயில் மதுரையிலிருந்து புறப்படும்.

மதுரை மற்றும் புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இடத்திற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனைப் போலவே திருச்சி மற்றும் ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.