திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் திரு மு. அப்பாவு, அவர்கள் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஏ.வ.  வேலு அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வழங்கினார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17.12. 2023 மற்றும் 18. 12. 2023 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவுகளுக்கு மேல் தண்ணீர் வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுத்தியது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில் மீட்பு பணிகள் துரிதப்பட்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வீதமும், 67 மாடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூபாய் 37,500 வீதமும், 1o64 வீடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூபாய் 10,000 வீதமும், 504 ஆடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூபாய் 4,000 வீதமும், 135 கன்றுகள் இழந்தவர்களுக்கு தலா ரூபாய் 20,000 வீதமும், 28,392 கோழிகள் இழந்தவர்களுக்கு தலா ரூ 100 வீதம், 2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இன்றைய தினம் முதல் கட்டமாக நீரில் மூழ்கி மற்றும் மின்சாரம் தாக்கி இறந்த 11 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வீதம், வீடு இழந்த 5 நபர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதமும், மாடு, ஆடு, கோழி இழந்த 5 உரிமையாளர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகையை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.

தமிழ்நாட்டு பொதுமக்களை பாதுகாக்கும் அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிவாரண பணிகள் அமைச்சர் பெருமக்கள் உயர் அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள்.

இந்நிகழ்வில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு. அப்துல் வகாப் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. மா.சுகன்யா அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. பி.எம் சரவணன் அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவராவ் அவர்கள், முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் திரு. ஆவுடையப்பன் அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு.டி.பி.எம் மைதீன்கான் அவர்கள், துணை மேயர் திரு.கே.ஆர் ராஜு அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.வி.எஸ்.ஆர் ஜெகதீஸ்  அவர்கள், பேரிடர் வட்டாட்சியர் திரு. செல்வம் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மாலைராஜா அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.