தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர். அதாவது “ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விகி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதை கண்டித்து தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.

கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி வெயில் அடிக்கிறது. நெருப்பில் செல்வது போல இருக்கு. கொரோனா காலம், வெயில், மழை, புயல் என அனைத்து காலத்திலும் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்து இருக்கிறோம். ஆகவே தமிழக முதலமைச்சர் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டவேண்டும் என்று ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர்.