ஜார்க்கண்ட் மாநிலம் ஜாப்லா பகுதியில் உள்ள ‘லட்சுமி சிசு வாடிகா’ (Lakshmi Shishu Vatika) என்கிற ப்ளே ஸ்கூல் (Play School) மழலையர் பள்ளியில், அங்கு படிக்கும் பிஞ்சு குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் எவ்வித இரக்கமுமின்றி மிகவும் கொடூரமான முறையில் அடித்துத் தாக்கும் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்தப் பெற்றோரையும் உறைய வைத்துள்ளது.

பள்ளிக்கு விளையாடவும் படிக்கவும் வந்த விவரம் தெரியாத  குழந்தைகளை அந்த ஆசிரியர் மிருகத்தனமாகத் தாக்கும் இந்த அருவருப்பான செயல், தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகிப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Guwahati Times (@guwahatitimes)

பிஞ்சுகளின் ஆரோக்கியத்தோடும் உயிரோடும் விளையாடிய அந்த அரக்கத்தனமான ஆசிரியர் மீது ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் காவல்துறை உடனடியாகத் தலையிட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தற்பொழுது மிகக் கறாராகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மழலையர் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் நடத்தை குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ள இந்த கொடூர தக்குதல் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.