பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில் பாலாஜி, அருகில் வந்த அதிகாரி ஒருவரை எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், “காவல்துறையை எட்டி உதைக்கும் போது மட்டும் செந்தில் பாலாஜி ஆக்டிவாக இருக்கிறார். நெஞ்சுவலி உள்ளவர் எப்படி இப்படி எட்டி உதைக்க முடியும். காவல்துறையை உதைத்த அவர் மீது FIR பதிவு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.