
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார்.
மேலும் சிங்கம்புணரி நூலகர் கமல்விழி நூலகம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா மற்றும் நூல்கள் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.