நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்தி காந்தி நரசிம்மலு என்பவரின் மகனுக்கு ஏப்ரல் நான்காம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு கொடுக்க அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் விலை உயர்ந்த பரிசு பொருள்கள் மற்றும் மொய் எதுவும் கொடுக்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக உங்களது வாக்குகளை மோடிஜிக்கு அளித்து அவரை பிரதமர் ஆக்குங்கள் என அச்சடித்தை விநியோகம் செய்து வருகிறார்கள். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.