
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோவானா தன்னுடைய வீட்டில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று நூடுல்ஸ் அவருக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர்கள் மீட்டை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.