தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி நாளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு குறித்த நேரத்தில் தேர்வர்கள் சென்று வர பல்கலைக்கழகம் வழியே இயங்கும் அனைத்து பேருந்துகளையும் நடை இழப்பின்றி குறித்த நேரத்தில் முழு அளவில் இயக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்து வருவோரை பேருந்துகளில் ஏற்று அனுப்ப அலுவலர்களை நியமிக்கவும் பேருந்துகளில் முன்புற கண்ணாடியில் தேர்வு தொடர்பான விவரங்களை இடம்பெற செய்யவும் போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.