தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் முறையாக பராமரிக்கும் விதமாக மின்தடை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்பாராத மற்றும் தேவையற்ற மின்தடைகளை தவிர்க்கும் பொருட்டும், மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கத்திலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொழுது மின்வாரிய ஊழியர்களின் நலம் கருதி மின்தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்களுடைய அசவுகரியத்தை கருத்தில் கொண்டு மின்தடை செய்யப்படாது. அந்த வகையில்  பிப்ரவரி 26 ஆம் தேதியான நாளை திங்கட்கிழமை வாரத்தில் முதல் நாள் என்பதால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மின்வாரிய பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.