ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் கடத்தி சென்ற குழந்தையின் புகைப்படத்தை இஸ்ரேலிய அரசு ட்விட்டரில் X தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் தந்தை,”அவரது தொட்டில் 5 நாட்களாக காலியாக உள்ளது. அவன் தாய் இல்லாமல் காஸாவில் தனியாக வசிக்கிறான்.

குழந்தை கிஃபிரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றனர். அவரை வீட்டிற்கு அழைத்து வர எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். குழந்தைகளை தூக்கிச் சென்றதற்காக நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.