வர்த்தகம் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தை யூனியன் வங்கி செயல்படுத்தி வருகின்றது. யூனியன் நாரி சக்தி எஸ்டிபி திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகின்றது.

21 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் இதற்கு தகுதியுடையவர்கள். தொழிலில் பெண்களுக்கு அதிக பங்கு இருக்க வேண்டும். கடனை ஐந்து ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் யூனியன் வங்கியை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://msme.unionbankofindia.co.in/#/nari-shakti-main என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.