
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்து 7 நாட்களாகியும் திமுக அரசும் காவல்துறையும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறிய கிராமத்தில் கூட்டுறவு பால் பண்ணைக்கு சென்று வந்த பெண் அந்த குறிப்பிட்ட தூரத்திற்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிய வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா இல்ல சுடுகாடா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் குற்றவாளிகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது நம்பும்படியாக இல்லை. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்வது போல் தான் தெரிகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அவருடைய 4 மற்றும் 3 வயது குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. மேலும் இந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.