எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதை விமர்சித்த நிலையில் யாருடைய ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அதிகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவாதிக்க தயாரா என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மதம் என்றால் அவருடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உதயநிதியுடன் விவாதிக்க நான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர்பி உதயகுமார் பேசியதாவது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியும் அனுபவமும் கிடையாது. சவால் விடுவதை விட மக்களை காப்பது தான் முக்கியம் என்றார். மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் என்று ஆர்பி உதயகுமார் அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.