தான் மட்டுமே உண்மையான ஓபிஎஸ், மற்ற 5 பேரும் டம்மியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனை ஓபிஎஸ்கள் இருந்தாலும், அம்மா அவர்களால் 3 முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டு, 12 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக பொருளாளராக இருந்தது, இந்த ஓபிஎஸ் மட்டும் தான் என்று கூறிய அவர், எத்தனை ஓபிஎஸ் வந்தாலும் அம்மாவின் நம்பிக்கை பெற்ற தன்னை வெல்ல முடியாது எனக் கூறினார்.