இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம். இது மிக நெடிய போராட்டம். நெடும் பயணத்தை தாண்டி படம் திரைக்கு வர உள்ளது. படம் அதீத நாட்கள் எடுத்துக் கொண்டது. நான் வரை ஆண்டு கால உலகத்தில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய கேரியரிலேயே 4 அரை ஆண்டுகாலம் எடுத்த படம் என்றால் அது இந்தப்படம் தான். 2018-ம் ஆண்டு இறுதியில் படம் தொடங்கியது. கண்ணை நம்பாதே படம் தொடங்கும்போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு அமைச்சராகி விட்டேன்” என நடிகர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.