
சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர் இவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் தனது மகளின் திருமண வாழ்வை எண்ணி வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில் திடீரென ஒரு நாள் மன வேதனை தாங்க முடியாமல் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் காவல்துறையின் விசாரணையில், மகள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் தான் இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.