நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 14ஆம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை எடுத்துக்கொண்ட நான்கு நாட்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு பலரும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ரயில் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட் கிடைப்பதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே உங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.