மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு விரைவில் மத்திய அரசு மகிழ்ச்சி செய்தியை அளிக்க உள்ளது. அதன்படி விரைவில் மூன்று சதவீதம் வரை அகல விலை படி அதிகரிக்கப்படும். இதனால் தற்போது உள்ள 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அகலவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளது . இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.