மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடந்த கார் விபத்து குறித்தான வீடியோவை நடிகர் அஜித்தின் மேலாளர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இது குறித்து தனது கருத்தை நடிகர் ஆரவ் பதிவிட்டுள்ளார். அதில், விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் நானும் அஜித்தும் நூலிழையில்  உயிர் தப்பினோம். கடவுளுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.