இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் மருந்தின் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.