நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான உத்தரவை கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் நாட்டில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது புதிய கல்விக் கொள்கையின் படி ஆறு வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களின் ஆறாவது வயது முதல் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தில் நுழைவதாகவும் இது மாணவர்களுக்கான சரியான பருவம் எனவும் 90% மூளை ஆறு வயதுக்குள் வளர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற கல்வி ஆண்டுகளில் மாணவர்கள் இடைவேற்றல் விகிதம் குறையும் எனவும் மாணவர்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு சரியான பருவமாக இது அமையும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. எனவே நாடு முழுவதும் இனி புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.