தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று தன்னுடைய வாக்கினை செலுத்தினார். இதைத் தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் போட்ட தப்பு கணக்கு அப்போது அவர்களுக்கு புரியும் என்று கூறியுள்ளார். மேலும் இது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை வைத்து தான் சசிகலா அப்படி பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.