முதல்வர் மு.க.ஸ்டாலின்  நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என கூறியுள்ளார்.