தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை ஆறு மாவட்டங்களிலும் நவம்பர் 20ஆம் தேதி திங்கட்கிழமை 9 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று அலர்ட் கொடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.