ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு ஆளுநரும் முதல்வரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு இபிஎஸ் ஆதரவு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.