ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை மற்றும் பித்ரகுண்டா உட்பட எட்டு விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் பித்ர குண்டா மற்றும் சென்னை சென்ட்ரல் காலை 4.55 மணி, சென்ட்ரல் மற்றும் பித்திரகுண்ட மாலை 4.30 மணி ரயில்கள் சேவை நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி மற்றும் காட்பாடி ரயில் சேவை காலை 6.50 மணி மற்றும் இரவு 9.15 மணி ரயில்கள் நவம்பர் 6 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை ரத்து.

காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை காலை 9.30 மணி ரயில், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி பகல் 12.45 மணி ரயில்கள் நவம்பர் 6 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை ரத்து.

அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா காலை 7.10 மணி, கடப்பா மற்றும் அரக்கோணம் மதியம் 2.30 மணி ரயில்கள் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.