திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நூல் விலை ஏற்ற மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நவம்பர் 25ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்துவதாக தொழில்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் தொழிலாளர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.