நள்ளிரவு நேரத்தில் கையில் பணமும் இல்லாமல், ஊருக்குச் செல்ல வழியும் இல்லாமல் ஒரு தம்பதி தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஈ-ரிக்ஷா ஓட்டுநரிடம், “எங்களிடம் காசு இல்லை” என்று அவர்கள் தயங்கியபடியே சொல்கிறார்கள். அதைக் கேட்ட அந்த ஓட்டுநர், எவ்வித யோசனையும் இன்றி, “பரவாயில்லை, உங்களுக்குப் பயணம் இலவசம்” என்று புன்னகையோடு கூறி அவர்களை அழைத்துச் செல்கிறார். பணத்தை விட மனிதநேயம் பெரியது என்பதை அந்த ஓட்டுநரின் செயல் காட்டுகிறது.
A couple felt helpless with no money and no way to get home.
Late at night, an e-rickshaw driver noticed them struggling.
COUPLE : We don’t have any money.
DRIVER: No problem, the ride is free for you ❤️😊pic.twitter.com/VOEkfdQCn7
— News Algebra (@NewsAlgebraIND) January 12, 2026
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த காணொளி இப்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பலரது இதயங்களையும் வென்று வருகிறது. ஆபத்தான நேரத்தில் உதவிய அந்த ஓட்டுநரின் செயலை ஆயிரக்கணக்கானோர் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். மனித நேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது.
