தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம் மற்றும் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை கார்களுக்கு 60 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், இலகு ரக வாகனங்களுக்கு 105 ரூபாய் இருந்து 115 ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 250 ரூபாயிலிருந்து 240 ரூபாய் ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மூன்று சக்கர வாகனங்களுக்கும் 260 ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு சக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய் ஆகவும், ஏழு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 45 ரூபாய் ஆகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.