
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிவடைந்த நிலையில் அவர் தன் ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் மங்கல்ரேவு என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடைய காரை அமமுக நிர்வாகிகள் சிலர் வழிமறித்தனர். அவர்கள் அவதூறாக பேசியதோடு ஆர்.பி உதயகுமாருக்கு எதிராக கோஷம் எழுப்பி அவரை தாக்க முயற்சி செய்தனர். அதோடு அவர்களின் கார்களை சேதப்படுத்தினர். இதில் மூவர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் தற்போது அமமுக நிர்வாகிகள் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.