சி.பா. ஆதித்யனாரில் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், நல்லவைகளை பற்றி மட்டுமே பேசுவோம் என்று மழுப்பலாக பதில் அளித்தார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணியினர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.