உத்தரபிரதேச மாநிலம் பார்லி பகுதியில் வயதான நபரான கிருஷ்ணானந்த் பாண்டே காலையில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று கிருஷ்ணானந்தை முட்டி தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த அவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ஆனாலும் மாடு தொடர்ந்து அந்த நபரை முட்டிக் கொண்டிருந்தது.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணானந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.