உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் சிறுவனை காப்பாற்ற நினைத்த குடும்பத்தினர் ஹரித்துவாருக்கு சென்றுள்ளனர். அங்குள்ள கங்கை ஆற்றில் சிறுவனை மூழ்க வைத்தால் சிறுவனுக்கு குணமாகிவிடும் என நம்பியுள்ளனர்.

இதனால் ஹரிதுவாருக்கு சென்ற குடும்பத்தினர் கங்கை ஆற்றில் சிறுவனை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கச் செய்துள்ளனர். சிறுவன் கதறியதையும் பொருட்படுத்தாமல் ஐந்து நிமிட அளவில் தண்ணீரில் மூழ்கச் செய்துள்ளனர்.

இதில் மூச்சு திணறி சிறுவன் உயிரிழந்துள்ளான். இவை அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.