
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டம் விகாஸ்நகரில், ஸ்பைடர்மேன் உடையில் வாகனத்தின் கூரையில் ஸ்டண்ட் செய்த இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 24 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மஹிந்திரா கார் மீது ஒரு இளைஞர் அமர்ந்து ஸ்டண்ட் செய்வது, மேலும் மற்றொரு இளைஞர் சிவப்பு கரடி உடையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன. இவர்கள் போக்குவரத்து விதிகளை புறக்கணித்து, சாலை பாதுகாப்பை மதிக்காமல் நடந்து கொண்டனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, உத்தரகாண்ட் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வீடியோவில் இருந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், ஸ்டண்ட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டன. “இப்படி ஸ்டண்ட் செய்வது விபத்து ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது” எனவும், இது பிறரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் செயல். இது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
🕷️ Spider-Man नियम तोड़कर फँस गया #UttarakhandPolice के जाल में!
चलती गाड़ी से बाहर निकलकर छत में बैठाकर स्टंट व रैश ड्राइविंग करते युवकों के सोशल मीडिया पर प्रसारित वीडियो का संज्ञान लेकर देहरादून पुलिस ने युवकों को हिरासत में लिया और दोनों गाड़ी सीज कर वैधानिक कार्यवाही की। pic.twitter.com/0rAVoeUMog
— Uttarakhand Police (@uttarakhandcops) June 21, 2025
இந்த சம்பவம், பொதுமக்கள் சாலையில் சுறுசுறுப்பாக பயணிக்க தேவையான பொறுப்புணர்வை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. “போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது என்பது ஒவ்வொரு நபரின் கடமை” என்பதையும், “பொழுதுபோக்குக்காக சாலையில் ஸ்டண்ட் செய்வது பொறுக்க முடியாத செயல்” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் உத்தரகாண்ட் போலீசாரின் விரைந்த நடவடிக்கை, சமூகத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.