போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடிய கணவரை விவாகரத்து செய்த நடிகை ஒருவர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது தெரிந்ததே. குழந்தை பிறப்பு, திருமணம் முதலான மகிழ்ச்சியான தருணங்களை பகிர்வதற்கு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல சின்னத்திரை நடிகை ஷாலினி தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதை வித்தியாசமான போட்டோ ஷூட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரில் நடித்து பிரபலமானவர்.

சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஷாலினி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் ரியாஸ் என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார்.  இந்நிலையில், தேசிய ஆண்கள் அமைப்பு ட்விட்டரில் இதற்கு அதிரடியாக பதில் அளித்துள்ளது. அதில், ‘அவரது கணவரை யாருக்காவது தெரிந்தால், அவரைச் சந்திக்க எங்களுக்கு உதவுங்கள். அவரது விவாகரத்தை நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.